Tuesday, 21 August 2012

விடை தேடி...


வந்த நோக்கம் கண்டறிய வக்கில்லை;

எந்த வேலையாவது ஒருவேலை வாங்கிவிட கட்டாயக்கல்வி

மனித இனம் மடைமையின் உச்சத்தின் வாழும் காலம் போலும்!


காசை கொடுத்து கல்வியை வாங்கும் கல்வியுகம். இது கலியுகத்தை விட மோசமானது.  

 இங்கே சுற்றி வளைத்து எல்லோரும் சொல்வதென்ன

 படி. நன்றா படித்தால்தான் வேலை கிடைக்கும். இதுதானே

 பணம் சம்பாதிக்கத்தான் படிப்பு என்றால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று படிக்க வேண்டியதுதானே? ங்குசந்தையைப் பற்றியும், பண வீக்கத்தைப் பற்றியும் பாடம் வைக்க வேண்டியதுதானே?

இதைக் கேட்டால், "அதெப்படி முடியும்? சிலர் மருத்துவராகலாம், சிலர் இன்ஜீனியராகலாம், சிலர் கவிஞராகலாம், ஆகவே அனைத்துத் துறை அறிவும் அவசியம்; பள்ளிக்கல்வியை முடித்ததும் அவரவருக்கேற்ற துறையில் மேல்படிப்பு படிக்கட்டும்" என்று பூசி மொழுகுகிறார்கள். அவையெல்லாம் அப்பட்டமான பொய்.
                கற்றவன் என்பவன் எவன்?
                தன் பெயருக்குப் பின்னால் தன் பெயரைவிட நீளமாக பட்டங்கனை அடுக்கிச்செல்பவனா? தேர்விற்கு முதல்நாள் முழுப்பொருள் அறியாமல் முக்கிமுக்கி படித்துவிட்டு மறுநாள் வந்து முழுங்கியதை கக்கிவிட்டு செல்பவனா?
                கற்றல் என்பது தேடலாக இருக்க வேண்டும். நீ இன்ன காரணத்திற்காக பிறந்திருக்கிறாய், நீ பயணிக்க வேண்டிய பாதை இதுதான் என்று ஒருவனுக்கு அவனை அடையாளம் காட்ட இயலாத கல்வியை கற்பனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
                பள்ளியையும், கல்லூரியையும் முடித்ததும் சிலபேர்நான் படிப்பையெல்லாம் முடித்துவிட்டேன்என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் முடித்துவிட்டதாக சொல்வது ஆழ்கடலின் ஆழத்தில் உள்ள அரை மணல்துகளின் அளவு கூட கிடையாது.
கற்றல் என்பது,

                 தட்டும் தரையில்லா ஆழத்தைப் போன்றது;

                 முட்டும் முடிவில்லா வானத்தைப் போன்றது.

போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

பள்ளிக்கல்வி என்பது அதற்கான கதவு, முடிவு அல்ல. பள்ளிப்படிப்பை பாதியில் விடுவது மட்டும்தான் இடைநிற்றலா? கற்றலை வாழ்நாளில் எந்தவொரு கட்டத்தில் கைவிட்டாலும் அது இடைநிற்றலே!

ஆதிகாலத்தில் பலஜீவராசிகள் கடுங்குளிராலும், கொதிக்கும் வெப்பத்தாலும் மடிந்து போயின. தன்னை காத்துக்கொள்வது எப்படி என்று அவைகளுக்குகற்றுக்கொள்ளதெரியவில்லை. பரிணாமவளர்ச்சியின் அடுத்தகட்டமாக ஒரு  ஜீவராசி இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தது. அப்போது தெரியாது இந்த  ஜீவராசி ஒருநாள் விண்ணிலும் காலடி எடுத்து வைக்குமென்று.

                காட்டில் மரங்கள் ஒன்றோடொன்று உரச தீப்பற்றியது. அதைப்பார்த்த இந்த புதிய  ஜீவராசியின் சிந்தையிலும் தீப்பற்றியது. யோசிக்கத் தொடங்கியது. இரு கற்களை எடுத்து உரசியது. தீப்பொறி பறந்தது. ஹாபிரமாதம்! பரிணாம வளர்ச்சியின் பாதையில்கற்றுக்கொள்ளும் திறன்படைத்த ஒரு  ஜீவராசி.

விண்ணும் மண்ணும் வியந்தன! காடுகளும் மலைகளும் மலைத்தனபறவைகளும் மிருகங்களும் புருவம் உயர்த்தின! "யாரடா இந்த  ஜீவராசி!!!என்று. அவன்தான் மனிதன்.

                அந்த வியப்புக்கும், மலைப்புக்கும் காரணம் மனிதன்கற்கும் திறன்படைத்திருந்ததுதான்.

                கற்றான். ஒவ்வொரு நாளும் கற்றான். ஒவ்வொரு அசைவிலிருந்தும் கற்றான். விரைவிலேயே தான் நிரந்தரமற்றவன் என்பதையும் கற்றான். தான் கற்ற விஷயங்கள் தன்னோடு சேர்ந்து  மண்ணோடு போய்விடக் கூடாதே என்பதற்காக கற்றதை பாறைகளிலும், குகைகளிலும், ஓலைச்சுவடிகளிலும் பதிவு செய்தான்.

அப்படிப்பட்ட கற்கும் வாய்ப்பை பயன்படுத்தி நல்ல புத்தகங்கள் படித்து வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வழிகாண வேண்டும்.

                போட்டி நிறைந்த உலகம் இது. ங்கே சாதிப்பது என்பது செத்த பாம்பை அடிப்பது போன்ற எளிதான காரியம் அல்ல, மலைப்பாம்புகளின் நடுவில் மல்லுக்கட்ட வேண்டயிருக்கும். போராட்டங்களை சமாளித்து வர, பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.

                பிடித்த துறையில் செல்ல முயலும்போது, நீ சிறுபிள்ளை, வயது போதாது, உனக்கு ஒன்றும் தெரியாது, எதிர்காலம் வீணாகிவிடும் என அச்சுறுத்துகிறார்கள்.

வயது போதாதா?
பத்துமாத கருவாக இருக்கும் போதே, “அம்மா! இந்த உலகை காண நான் தயாராகிவிட்டேன். அதற்கான நேரம் வந்துவிட்டதுஎன்று என் அம்மாவின் வயிற்றில் எட்டி உதைத்து பிரசவவலியை ஏற்படுத்தி என்னை வெளியே வரவிடு என்று நான்”  என் தாய்க்கு சொன்னேன்.

                நான் போகும் வழியில் எனக்கு எவர் வேண்டுமானாலும் வழிகாட்டுங்கள். ஆனால் என்வழியையே காட்ட எவரும் நினைக்காதீர்கள். இது என் வாழ்க்கை, என் பாதை, என் பயணம், என்னை தேர்ந்தெடுக்கவிடுங்கள்.

மனித இனம் முழுமையாக எந்திரமாக மாறுவதற்கு முன் அதை திரும்பவும் வாழ்வின் அழகியலோடு ஒட்டி இயங்கச்செய்து, இயற்கையோடு இயைந்த வாழ்வை தேடும் வழியில் கல்வியை பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பாதையில் செல்பவனே கற்றவன். 

                சேற்றில் விழுந்து கிடக்கிறோம் பரவாயில்லை. அதற்காக நாம் கிடப்பது சேறு என்பது கூடவா தெரியாமல் கிடப்பது?

                இவற்றையெல்லாம் நினைக்கும்போது மனித இனம், பரிணாம வளர்சியடையாமல் குரங்காகவே இருந்திருக்கலாமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் ஒருவாறு அமைதி அடைகிறேன்சேற்றில்தான் முளைக்கும் செந்தாமரைஎன்பதால்.

1 comment: